புதுடெல்லி:மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது:ஐதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர்கள் கல்லூரி கடந்த 2014ம் ஆண்டு காவல்துறையில் பணிபுரிவோர் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்கு காவல்துறை ஆராய்ச்சி மேம்பாடு மையம் உதவியது. இந்த ஆய்வில் மாநிலங்கள் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிவோரில் 90 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ஆய்வு அறிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறை இயக்குனர் ஜெனரல்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி