×

குளத்தூர் அருகே விபத்து : அரசு பஸ் மோதி 23 ஆடுகள் பலி

குளத்தூர்: குளத்தூர் அருகே அரசு பஸ் மோதி 23 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த மேல செல்வனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (40). ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவர், தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள ஒருவரது நிலத்தில் ஆட்டுக்கிடை போடுவதற்காக தனது 80 ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

குளத்தூர் தனியார் கல்லூரி வழியாக வந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அதிவேகமாக சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக ஆடுகள் மீது மோதியது. இதில் 23 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டிச்சென்ற கலைச்செல்வம் நூலிழையில் உயிர் தப்பினார். தகவலறிந்த குளத்தூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Accident ,Kuttur , Kulatur, Government bus, goats
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...