×

அதிமுக தேர்தல் அறிக்கை பணி இபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கி வைத்தனர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை இபிஎஸ்-ஓபிஎஸ் நேற்று தொடங்கி வைத்தனர்.  நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்தனர்.

 இதில், தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செம்மலை மற்றும் மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி ரபி பெர்னார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , AIADMK election, EPS-OBS
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...