×

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தமிழக வீரர் பிரசாந்த் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட தமிழக வீரர் பிரசாந்த் தகுதி பெற்றார்.சென்னையில் 21 ஆண்டுகளாக  நடந்து வந்த சென்னை ஓபன் ஏடிபி தொடர் 2017ம் ஆண்டு புனேவுக்கு மாற்றப்பட்டது. அதனால் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச வீரர்கள் பங்கேற்கும்  ஏடிபி   டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடைபெறவில்லை. அதற்கு பதில் ஏடிபி சேலஞ்சர் தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் சென்னை ஓபன்  ஏடிபி சேலஞ்சர் தொடர் (பிப். 4-10)  நுங்கம்பாக்கம் டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

 ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் வெல்பவர்களுக்கு கோப்பையுடன் சுமார் 40 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசாக  வழங்கப்படும். நேற்று நடந்த முதல் சுற்றில் தமிழக வீரர் பிரசாந்த் விஜய்சுந்தர், ஸ்பெயினின் கார்லோஸ் பவுள்டா பர்கிஸுடன் தினார் .விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பிரசாந்த் 6-2, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர்  அர்ஜூன் காடே 6-4, 6-1 என்ற நேர் செட்களில்   ரஷ்யாவின் இவான் நெடேல்கோவை வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prasanth ,round , ATP Challenger,tennis player, Prasanth , to 2nd round
× RELATED நான் முதல்வன் திட்டம் என்...