நெய்வேலி : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.2000 கோடி நிலுவை தொகையை அடுத்த இரு மாதங்களுக்குள் செலுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு TANGEDCO-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலக்கரி கொள்முதல் குறித்த ஒப்பந்தத்தின் படியான கட்டணங்களை TANGEDCO செலுத்தவில்லை என கூறி மின்சாரம் தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நெய்வேலி நிலக்கரி மையம் முறையீடு செய்து இருந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கான ரூ.2000 கோடி நிலுவை தொகையை அடுத்த இரு மாதங்களுக்குள் TANGEDCO வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரச்சனைகள் குறித்து முறையீடுவதற்கு முன்பு முதலில் நிலுவை தொகை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி