சென்னை: நடிகை பானுப்ரியா விவகாரம் தொடர்பாக சென்னையிலும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரையடுத்து குழந்தை தொழிலாளர் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் நடிகை பானுப்ரியா மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு வைத்ததாக பானுப்ரியா மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி