×

கொல்கத்தா காவல் ஆணையரை விசாரணைக்கு ஒத்துழைக்க கோரிய மனு நாளை விசாரணை

புதுடெல்லி : நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க காவல்துறையின் கைது செய்தனர். இதையடுத்து கொல்கத்தா காவல் ஆணையரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக்கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இன்றே விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிபிஐ கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ் குமாருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என அறிவித்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Calcutta Police Commissioner ,investigations , Kolkata Police Commissioner, CBI, Supreme Court, Rajiv Kumar
× RELATED சிறப்பு புலனாய்வுக்காக 5 பெண்...