சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி நேற்று மணப்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது. “ தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக அழகிரியை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இந்த நியமனத்தை முழு மனதுடன் வரவேற்கிறேன். அழகிரி இளமைபருவம் தொட்டே தன்னை காங்கிரஸ் கட்சியில் ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது தலைமை பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகமும், வழிமுறையையும் நிச்சயமாக தரும். கொஞ்சம் சோர்வடைந்து இருந்த தொண்டர்கள் எல்லாம் இந்த அறிவிப்புக்கு பிறகு அவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். வருகின்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கு கண்டிப்பாக தொண்டர்கள் முழு உற்சாகத்துடன் உழைப்பார்கள்” என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி