×

எந்நாளும் அண்ணாவின் நினைவைப் போற்றிப் பயணிப்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணா நினைவுநாள் முன்னிட்டு கழக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அண்ணாவையும், அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு கடந்தாலும்  என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இணையிலா எழுத்தாலும், ஈர்த்திடும் பேச்சாலும் அயராத உழைப்பாலும் , ஆளுமையாலும் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வை  ஊட்டியவர் அண்ணா என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் அண்ணா என்றும் அக்கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எந்நாளும் நம் நெஞ்சில் வாழும் அண்ணாவின் நினைவைப் போற்றிப் பயணிப்போம். இன்றைய அத்தியாவசியத் தேவை அறிஞர் அண்ணா வகுத்துத் தந்த ஆற்றல் மிகுந்த கொள்கைகள்தான்.  அண்ணாவையும் அவரது கொள்கைகளையும் நெஞ்சில் ஏந்துவோம் என்றும் அண்ணன், தம்பி பாசத்துடன், உடன்பிறப்புகள் என்ற உணர்வுடன் இணைந்து பயணித்து, அண்ணா கண்ட இயக்கத்தை எந்நாளும் வெற்றி பெறச் செய்திடுவோம் எனவும் திமு கழக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anna ,volunteers ,MK Stalin , MK Stalin, Anna, Memorial Day,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்