×

நெல்லை அருகே பயங்கரம் சென்னை லாரி டிரைவர்கள் 2 பேர் வெட்டிக்கொலை: பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய இருவர் சரண்

வீரவநல்லூர்: நெல்லை அருகே பழிக்குப்பழியாக, சென்னை லாரி டிரைவர்கள் இருவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுெதாடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே கிளாக்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடர்மணி (26). இவரது நண்பர் கோவில்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் கணேசன் என்ற துரைப்பாண்டி (37). இருவரும் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தனர்.  இவர்கள் இருவரும் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நெல்லை கோர்ட்டில் ஆஜராக சென்னையில் இருந்து வந்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லை அருகே கான்சாபுரத்தில் உள்ள தாத்தா சாமிநாதபிள்ளை வீட்டுக்கு நண்பருடன் சுடர்மணி வந்தார். வீட்டுக்கு வெளியே அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 5 பேர் கும்பல், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி அருண்சக்திகுமார், சேரன்மகாதேவி ஏஎஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் கொலை நடந்த பகுதியை பார்வையிட்டனர். விசாரணையில் இரட்டை கொலை நடந்தது ஏன் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சுடர்மணியின் தங்கைக்கும், கிளாக்குளத்தை சேர்ந்த பழனி மகன் செல்வம் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்ததும் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

உடனடியாக அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து வெளியூரில் திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் செல்வம் தொடர்ந்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இது சுடர்மணிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2017 ஜனவரியில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் தங்கியிருந்த செல்வத்தை அவர் வெட்டிக் கொலை செய்தார். இவ்வழக்கில் சுடர்மணி, கணேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் உயிருக்கு பயந்து சென்னைக்கு தப்பியோடினர். அங்கு இருவரும் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் விசாரணைக்காக இருவரும் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த செல்வத்தின் அண்ணன் புலிக்குட்டி என்ற மகேஷ், தனது தம்பி கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க சுடர்மணி, கணேசன் இருவரையும் கண்காணித்துள்ளார். அவர்கள் கான்சாபுரத்தில் தங்கியிருப்பதை அறிந்த புலிக்குட்டி உள்ளிட்ட 5 பேர், 2 பைக்குகளில் சென்று சுடர்மணி, கணேசன் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.  இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குபதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் புலிக்குட்டி என்ற மகேஷ், இவரது உறவினர் லட்சுமணகாந்தன் ஆகியோர் நேற்று மதியம் நெல்லை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் ராமதாஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trucker ,Chennai , Nellai, Chennai truck drivers,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...