×

குடிக்க பணம் தராத தாய் சரமாரி வெட்டிக் கொலை: மகன் வெறிச்செயல்

தா.பேட்டை: திருச்சி அருகே குடிக்க பணம் தராததால் தாயை சரிமாரி ெவட்டிக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள திருத்தலையூரை சேர்ந்தவர் பச்சையம்மாள்(60). இவரது மகன் ராஜா(38). பெயின்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன், 1 மகள் உள்ளனர். ராஜாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால், ராஜாவின் மனைவி தனது குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் தற்போது சென்னையில் கூலிவேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.  ஆனாலும் ராஜா குடிப்பழக்கத்தை விடவில்லை. தினமும் போதை தலைக்கேறிய நிலையில் தான் வீட்டுக்கு வருவார். நேற்று இரவும் வழக்கம் போல் அதிக போதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் தாய் பச்சையம்மாளிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். தன்னிடம் பணம் இல்லை என கூறி விட்டு பச்சையம்மாள் படுத்து தூங்கி விட்டார்.  இதனால் தாய் மீது, ராஜா கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த பச்சையம்மாளை அரிவாளால் சரமாரி வெட்டினார். இதில் தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்த பச்சையம்மாள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அவரது சடலத்தை ராஜா, இழுத்துச்சென்று அடுப்பறையில் போட்டார். பின்னர் ராஜா ஹாலில் படுத்து தூங்கி விட்டார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் போதை தெளிந்து எழுந்த ராஜா திடீரென, அருகிள் உள்ள வீடுகளுக்கு சென்று கதவை தட்டி தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூப்பிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் பச்சையம்மாள் சடலமாக கிடந்தார். அவரை ராஜா தான் ெகாலை செய்து விட்டார் என்பதை பக்கத்து வீட்டினர் புரிந்து கொண்டனர். உடனே இதுபற்றி ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். முசிறி டிஎஸ்பி சீதாராமன், இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, எஸ்ஐ ரோகினி மற்றும் போலீசார் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணை  நடத்தினர். பின்னர் சடலத்தை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : piglets ,Thai , Drinking, mother, killing, son
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா