சென்னை: பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் தூர்வாரப்பட்டு கரைகளை பலப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு ரூ.4 கோடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ரூ.11 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி