×

தூத்துக்குடி அருகே இல்லாத ஊருணியை தூர்வாரியதாக கணக்கு காட்டி முறைகேடு... ஊராட்சி செயலர் நூதன திருட்டு

தூத்துக்குடி: இல்லாத ஊருணியை தூர்வாரியதாக கணக்கு காட்டி நூதனமுறையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இல்லாத ஊருணியை தூர்வாரியதாக கணக்கு காட்டி அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் தொடர்பாக சீத்தாராமன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனது கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த பதிலைப் பெற்றார்.

அந்த தகவல்களில் ருத்திரப்ப நாயக்கர் ஊருணி தூர்வாரப்பட்டதாக பதிவுகள் உள்ளது. ஆனால் அப்படி ஒரு ஊருணியே அங்கு இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த  ஊருணியை தூர்வாரியதாகச் சொல்லி ஊராட்சி செயலர் அய்யாச்சாமி என்பவர் ரூ.5 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வேலை பார்ப்பவர்கள் கணக்கில் பணத்தை வரவு வைத்து அய்யாசாமி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tuticorin ,companion ,Accounting Secretary , Tuticorin's,account, Accounting ,Secretary
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!