×

சீர்காழி அருகே குரங்கின் அட்டகாசத்தால் ஊரையே காலி செய்த மக்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஒற்றை குரங்கின் அட்டகாசத்தை தாங்கமுடியாத கிராமமக்கள் ஊரையே காலி செய்துள்ளனர். சீர்காழி அருகே தென்னலக்குடியில் சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய குரங்கு கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த குரங்கு யாரை பார்த்தாலும் துரத்துவதாகவும், கடிப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு கிராமத்திற்கு வெளியே உள்ள கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர். ஒற்றை குரங்கை பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் ஊருக்குள் திரும்பி செல்ல மாட்டோம் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : town ,climber ,Sirkazhi , villagers,evacuated,area,monkey,Sirkazhi,authorities,action
× RELATED புதுகும்மிடிப்பூண்டியில் சோகம்...