×

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: 1 மணிநேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆல்பர்ட் என்ற ஆசிரியருக்கு சொந்தமான ஸ்கூட்டியில் தான் பாம்பு புகுந்து கொண்டு போக்கு காட்டியது. பள்ளியில் இருந்து ஆல்பர்ட் இருசக்கர மோட்டார் வாகனத்தில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கடைவீதியில் வந்தபோது அவரது வாகனத்தில் பாம்பு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பழுதுநீக்கும் கடையில் விட்டு பாம்பை பிடிக்க போராடியும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து 1 மணிநேரம் போராடி தான் பாம்பை பிடித்தனர். பாம்பை பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ulundurpet ,struggle , Snake,vehicle,Ulundurpet,caught,struggle
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...