×

ஆதரவற்றோர் காப்பகத்தில் ஆபாச வீடியோ காட்டி சிறுமிகளிடம் சில்மிஷம்: போக்சோவில் ஒருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரமணாநகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள மகாசக்தி நகரில் ஆதரவற்ற குழந்தைகள் தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, சிறுமிகளுக்கு காப்பகத்தின் மேலாளர் வினோத்குமார்(34) பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அங்கிருந்த கணினியில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் பதிவேற்றியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இரண்டு கணினிகள், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அங்கிருந்த 15 சிறுமிகள் மீட்கப்பட்டு, அரசு அங்கீகரிக்கப்பட்ட வேறொரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், தினமும் இரவு நேரத்தில், கணினியில் ஆபாச வீடியோக்களை போட்டு காண்பித்து, அதனை பார்க்கும்படி சிறுமிகளை கட்டாயப்படுத்தியதும், ஆபாச வீடியோவில் இடம் பெறும் காட்சிகளைப் போல செய்யுமாறு துன்புறுத்தியதும் தெரியவந்தது.

சிறுமிகளின் தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பக நிர்வாகி பாபு என்ற நந்தகுமார் மற்றும் மேலாளர் வினோத்குமார் ஆகியோர் மீது, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கோகிலா கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மேலாளர் வினோத்குமாரை ேபாக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நிர்வாகி நந்தகுமார் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். மேலும், அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இந்த காப்பகத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Paxo , orphanage, arrested ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை...