×

கேரளாவில் 3 வாரங்களாக பழங்களை மட்டுமே சாப்பிட்டு காட்டில் வாழ்ந்த காதல் ஜோடி

திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி காட்டுக்குள் சென்று 3 வாரமாக பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள மேலுகாவு பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டன் என்ற ஜார்ஜ் (21). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. கடந்த 6ம் தேதி அந்த பெண் திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், அவர் ஜார்ஜுடன் சென்றது தெரிந்தது. ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் தொடுபுழா அருகே உள்ள மலைப்பகுதியில் இருப்பது தெரிந்தது.

போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டனர். இருவரும் 3 வாரமாக காட்டில் தனியாக தங்கி, பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்துள்ளனர். இதனால், அவர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். போலீசார் அவர்களை அழைத்து வந்தனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து, போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜார்ஜை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இளம்பெண் கோட்டயத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : love pair ,Kerala , Kerala, love couple, forest
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...