×

ஆழியார் ரோட்டில் யானை நடமாட்டம் அதிகரிப்பு : வனத்துறையினர் கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் ரோட்டில், யானை  நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஆண்டு ஜூன் முதல் பல மாதமாக தென்மேற்கு பருவமழை இருந்தது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழை இல்லை. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் குறைய துவங்கியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இறை தேடி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக  நவமலை வனப்பகுதியிலிருந்து, யானைகள் கூட்டம் கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி வந்து செல்கிறது.

இதில் கடந்த சில நாட்களாக நவனமலையிலிருந்து வந்த  ஒற்றை காட்டுயானை,  ஆழியார் ரோட்டில் வெகுநேரம் உலவி, அங்குள்ள மரக்கிளைகளை உடைத்து சாப்பிட்டது. நேற்று காலையில், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதை ரோட்டோரம் நின்ற ஒற்றை யானையை பார்த்த சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்திவிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி ரோட்டோரம் உலாவரும் விலங்குகளை தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்காக,  வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Aliyar , Aliyar, elephant, acrobatics
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...