சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்டுள்ள சக்தி திட்டத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் டி.செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல்காந்தியின் சிறப்பு திட்டமான சக்தி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ராகுல் காந்தியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் விரைந்து செயலாற்றிட கேட்டுக் கொள்கிறேன். கட்சிக்கான மாவட்ட அடிப்படையில், சென்னை வடக்கு- டி.வி.துரைராஜ், சென்னை கிழக்கு-எஸ்.கே.நவாஸ், சென்னை மேற்கு- ஜான்சன், திருவள்ளூர் வடக்கு-திவாகர், திருவள்ளூர் தெற்கு- ராஜ சரவணண், திருவள்ளூர் மத்தி-என்.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வடக்கு- டி.சிவராமன், காஞ்சிபுரம் மேற்கு-முத்துக்குமார், காஞ்சிபுரம் மேற்கு-லோகநாதன் என மொத்தம் 61 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி