×

பயணிகளுக்கு தொல்லை கொடுத்ததாக அதிமுக தொழிற்சங்கத்தினர் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி 300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த, பேருந்துகளில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி, ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்த அதிமுக தொழிற்சங்கத்தினர் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்து அதிமுக நிர்வாகியும், தமிழ்நாடு ஆம்னி பஸ் அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி தலைவருமான இ.அண்ணாதுரை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கோயம்பேடு ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் செயல்படும் அண்ணா தொழிலாளர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள்மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இதனால் சங்க உறுப்பினர்கள் மிகுந்த தொல்லைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதை கண்டித்து வருகிற பிப்ரவரி 19ம் தேதி கோட்டை முன் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : unions ,AIADMK , haras passengers, Case filed, AIADMK
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...