×

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பட்டாக் கத்தியுடன் வந்து இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பட்டாக் கத்தியுடன் வந்து இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் வந்து மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணன் தெருவைச் சேர்ந்த அஜித் என்பவரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது.

இது குறித்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை  அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பட்டக்கத்தியுடன் வரும் 3 பேர் இருசக்கர வாகனத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இருசக்கர வாகனத்தை திருடும் போது யாராவது வந்து விட்டால் அவர்களை தாக்குவதற்கு ஒருவர் கத்தியுடன் காவலுக்கு இருக்க மற்ற இருவரும் திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : steal ,barak knife ,Chennai , Two-wheeler ,steal , barak knife , Chennai,Chintadripet
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...