×

அமெரிக்காவில் சம்மன் அளிக்கச் சென்ற போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபர்கள் சுட்டுக்கொலை

டெக்சாஸ்: அமெரிக்காவில் குற்ற வழக்கில் ஆஜராக அழைப்பாணை கொடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவழக்கு ஒன்றில் ஆஜராக கோரி டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டது. இதனை நேரில் வழங்குவதற்காக ஹோஸ்டன் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனையடுத்து பதில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் 2 பேரை சுட்டு வீழ்த்தினர். மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 5 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து ஹூஸ்டன் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gunmen ,Sammon ,US , USA, Texas, Houston, shotgun,
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...