×

ஒய்எஸ்ஆர். காங்.கில் என்டிஆர் மருமகன் - ஜெகன்மோகனுடன் சந்திப்பு

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் புரந்தரேஸ்வரி. இவருடைய கணவர் தக்குபாட்டி வெங்கடேஸ்வரலு.  காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக புரேந்தரேஸ்வரி இருந்தார்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புரந்தரேஸ்வரி பாஜ.வில் இணைந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்ல புரந்தேஸ்வரியும், அவருடைய மகன் இத்தேஷ், கணவர் வெங்கடேஸ்வரலு ஆகியோரும் நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். பின்னர், வெங்கடேஸ்வரலு கூறுகையில், ‘‘புரந்தரேஸ்வரி தொடர்ந்து பாஜ.வில் செயல்பட உள்ளார். அவர் அரசியலில் மாற்றம் செய்ய விரும்பினால், அது அரசியலை விட்டு விலகுவதாக மட்டுமே இருக்கும். தற்போது நானும் எனது மகனும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளோம். நல்ல நாள் பார் த்து கட்சியில் இணைய உள்ளோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : YSR ,nephew - meeting ,NDR ,Kang ,Jaganmohan , NTRamarao, Purandeswari, Jegan Mohan Reddy
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்