×

நாட்றம்பள்ளி அருகே அரச, வேப்ப மரத்திற்கு திருமணம் : மொய் விருந்து வைத்து மக்கள் கொண்டாட்டம்

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் அரச மற்றும் வேப்ப மரத்திற்கும் வினோத திருமணம் ஊர்மக்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டியில் உள்ள முருகன் கோயில் எதிரே அரசமரமும், வேப்பமரமும் அருகருகே உள்ளது. இந்நிலையில், அரசமரத்தை மாப்பிள்ளையாகவும், வேப்பமரத்தை பெண்ணாகவும் பாவித்து திருமணம் செய்ய ஊர்மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி,  முறைப்படி பத்திரிக்கை அடித்து நேற்று  காலை இரு மரத்திற்கும்  திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து, அறுசுவை விருந்து, மொய் எழுதுதல் போன்றவை நடைபெற்றது. இதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ‘அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைப்பது ஊருக்கு நன்மை விளைவிக்கும் என்பது ஐதீகம், அதன்படி, இன்று (நேற்று) முகூர்த்த நாளையொட்டி இரு மரத்திற்கும் திருமணம் செய்யப்பட்டது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : royal ,celebration ,Nathurampalli ,feast , Natrimatti, neem tree, marriage
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது