×

திருப்பத்தூரில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்; தட்டிக்கேட்ட பெண் காவலருக்கு தர்ம அடி

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை தட்டிக்கேட்ட பெண் காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு ஆளான பெண் காவலர் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் கலையரசி ஆவார். இவர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் அச்சமங்கலத்தை சேர்ந்த முத்து என்ற இளைஞன் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை பெண் ஏட்டு கலையரசி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த முத்து பெண் ஏட்டை தாக்கியுள்ளார். பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் பெண் ஏட்டு தாக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,Tirupattur ,Dharma , Tiruppattur, female police, drug abuse, youth,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...