×

அமெரிக்காவில் பரிதாபம் பெற்றோர், காதலி குடும்பத்தினரை சுட்டுக்கொன்று தப்பிய வாலிபர்

ஹூஸ்டன்: அமெரிக்காவில் பெற்றோரையும் காதலி உள்பட அவரது குடும்பத்தினரையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.அமெரிக்காவின் லூசியானாவில் கொன்சலெஸ் நகரைச் சேர்ந்தவர் டகோடா தேரியோட். இவர் கடந்த சனிக்கிழமை காலை, வெளியில் செல்வதற்காக காரில் ஏறிய தனது பெற்றோர் கெய்த் தேரியோட், எலிசபெத் தேரியோட்  ஆகியோரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரில் ஒருவர் இறக்கும்முன் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதில் சுட்டது, அவர்களது மகன் டகோடா  என்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

இதேபோன்று, அருகே உள்ள லிவிங்ஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் பில்லி எர்னெஸ்ட், டேனர் எர்னெஸ்ட், சம்மர் எர்னெஸ்ட் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த  கொலைகளையும் செய்தவரும் டகோடா தான் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் சம்மர் எர்னெஸ்ட், டகோடா தேரியோட்டின் காதலி என பில்லியின் சகோதரி கிறிஸ்டல் டியங் கூறினார். தனது பெற்றோரையும் காதலி குடும்பத்தினரில் 3 பேரையும் கொலை செய்துவிட்டு டகோடா மிசிசிப்பி தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : survivor ,US , Miserable in the United States A young man who escaped from parents and girlfriends
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...