×

தூத்துக்குடியில் அதிமுக வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, பகுதிசெயலாளர்கள் முருகன், சேவியர், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தலைமை பேச்சாளர்கள் நூர்ஜஹான், முருகானந்தம், ராஜசேகர், வக்கீல் அணி செயலாளர் சேகர், ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், சவுந்தரபாண்டியன், ராஜ்நாராயணன், ஐயாத்துரைபாண்டியன், மகாராஜன், நகர பேரூர் செயலாளர்கள் செல்லத்துரை, ஆத்திபழம், செய்யது இப்ராஹிம், மகேந்திரன், அரசகுரு, சிவலிங்கம், செந்தில்ராஜ்குமார், மாவட்ட அணி செயலாளர்கள் செல்லத்துரை, ராஜா,

குருதாய்,  ராஜசேகர், விஜயகுமார், டார்சன்,; சாலமோன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜெபசிங், துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், மீனவரணி துணைத்தலைவர் டெலஸ்பர், வக்கீல்கள் ஆண்ட்ருமணி, பிள்ளை விநாயகம், பிரபு, முன்னாள் தொகுதி செயலாளர் வடமலை பாண்டியன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பால்ராஜ்,  போக்குவரத்து தொழிற்சங்க மண்டல இணைச்செயலாளர் சங்கர், வட்டச்செயலாளர்கள் பூக்கடைவேலு, முருகன், சீனிவாசன், மனோகர், ஜெயகணேஷ்,  வட்டப்பிரதிநிதிகள் மூர்த்தி, மணிகண்டன், மகளிர் அணி வசந்தா, மேரி, சண்முகத்தாய், உள்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi ,AIADMK ,gathering , Thoothukudi, AIADMK, Veeranakana day public meeting
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...