×

அறங்காவலர் குழு நியமனம் - கோயில் உதவி கமிஷனர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த காந்திமதிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அறங்காவலர் குழு நியமிக்கப் படவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு அனைத்து அறநிலையத்துறை கோயில்களிலும் இடஒதுக்கீடு அடிப்படையில் அறங்காவலர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று விசாரித்தனர். அறநிலையத்துறை சார்பில், பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான மாவட்டக் குழுவை ஏற்படுத்துவதற்காக உரிய நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று பிப். 10க்குள் அனுப்ப வேண்டுமென அறநிலையத்துறை கமிஷனர் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட கமிட்டியை அமைப்பதற்கான அறிவிப்பை அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களுடன் வரைவு திட்டத்தை அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக மார்ச் 4ல் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioners ,Trustee Committee Appointment - Temple Hour ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...