×

பெண் என நினைத்து திருநங்கையை அழைத்து சென்ற வாலிபர்கள்

பாடாலூர் : பெண் என நினைத்தை திருநங்கையை உல்லாசம் அனுபவிக்க அழைத்து சென்ற வாலிபர்கள், திருநங்கையுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாததால் அவரை கத்தியால் குத்திவிட்டு சுடிதார் பேண்ட்டையும் அவிழ்த்துக்கொண்டு போய் விட்டனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  பெரம்பலூர் அருகே உள்ளது பாடாலூர். இங்குள்ள ஒரு ஏரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் இன்று அதிகாலை ஒரு இளம்பெண் ரத்த காயங்களுடன் கிடந்தார். அந்த வழியாக அதிகாலையில் வயல் வேலைக்கு சென்ற விவசாயிகள் அந்த பெண் கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்சுக்கும், பாடாலூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண் பெயர்  நர்மதா(25), திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர். இவர்  சுடிதார் பேண்ட் இல்லாமல், டாப்ஸ் மட்டும் அணிந்திருந்த நிலையில்  கால்களில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை பெரம்பலூர்  அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நர்மதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

நர்மதா  நேற்று இரவு  சமயபுரம் செக்போஸ்டரில்  நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக சென்னை நோக்கி ஒரு கார் வந்து உள்ளது. அந்த காரை நர்மதா நிறுத்தி உள்ளார். காாில் 2 பேர் இருந்துள்ளனர்.  அவர்கள் நர்தாவிடம் நைசாக பேசி உள்ளனர். அவர் அழகான பெண்மணி என கருதி காரில் ஏற்றிக்கொண்டனர். வழியில் உல்லாசம் அனுபவிக்கலாம். தானே வந்ததை ஏன் தவிர்ப்பானே என கருதி ஏற்றிக்கொண்டனர். ஆள் நடமாட்டம் இல்லாத ஏரி அருகே சென்றபோது காரை நிறுத்திவிட்டு 2 பேரும் நர்தாவை ஏரிக்கரைக்கு அழைத்து சென்று உள்ளனர். நர்மதாவுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என உச்சகட்ட ஆசையில் இருந்தஇருவரும் நர்மதாவின் உடைகளை களைந்தனர். அப்போது தான் நர்மதா பெண்ணல்ல, திருநங்கை என தெரியவந்தது. நாட்டு சரக்கு அடித்தவனுக்கு புளித்த மோர் கொடுத்த கதையாகி போன இருவரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

கோபத்தில் நர்மதாவின் பேண்டை கிழித்து எடுத்து சென்று விட்டதுடன் , டாப்சிலும் ஆங்காங்கே கிழித்து விட்டு கால் முட்டி பகுதிகளில் சிறிய கத்தியால் கீறி காயப்படுத்தி சரமாரி தாக்கி விட்டு கொடுத்த பணத்தையும் பறித்துக்கொண்டு காரில் தப்பி விட்டனர். காயத்துடனும், பேண்ட் இல்லாமலும் மெயின் ரோட்டுக்கு வந்த  நர்மதா அங்கேயே இரவு பொழுதை கழித்தார். காலையில் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிய இருவரையும் தேடி வருகிறார்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ladies , Young ladies ,transgender , girl
× RELATED 100 வயதை கடந்த 2 மூதாட்டிகளுக்கு கிராம...