×

கள்ளக்காதலை கை விடாததால் மனைவியுடன் தூங்கிய மீன் வியாபாரிக்கு வீடு புகுந்து சரமாரி வெட்டு

சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் வெங்கட ரங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன்(37). இவரது மனைவி விஜயலட்சுமி(35). இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயலட்சுமி எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நீச்சல் பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அடுக்குமாடி வீட்டின் மூன்றாவது தளத்தில் வசித்து வரும் சரவணன், மெரினா கடற்கரையில் மீன் வியாபாரம் மற்றும் மீன் வறுவல், பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் நேற்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மனைவி விஜயலட்சுமியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மாலை 3.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரவணன் வீட்டின் முன்பு நின்றனர். உடனே அவர்கள் அரிவாளுடன் சரவணன் வசிக்கும் 3வது தளத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சரவணனுக்கு வலது கை துண்டாகி துடித்தார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்து கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போதும் ஆத்திரம் தீராத மர்ம கும்பல் விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினர்.

பின்னர் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓடினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் வசிப்போர் உயிருக்கு பயந்து நாளாபுறமும் சிதறி ஓடினர். இதனால் வெங்கடரங்கம் பிள்ளை தெருவே போர்களம் போல் காட்சியளித்தது.

சம்பவம் குறித்து பொதுமக்கள் ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சரவணன் மற்றும் விஜயலட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரவணனுக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஐஸ் அவுஸ் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த ரவுடி ஆட்டோ ராஜா தனது கூட்டாளி வினோத்துடன் சேர்ந்து வெட்டியது தெரியவந்தது. குற்றவாளிகள் 5 பேரை பிடிக்க மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: வெட்டு பட்ட சரவணன் மீன் வியாபாரம் செய்து வருவதால் அதே பகுதியை ேசர்ந்த ரவுடி ஆட்டோ ராஜா மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி கடந்த இரண்டு  ஆண்டுகளாக இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மனைவியின் கள்ளக்காதல் குறித்து ரவுடி ஆட்டோ ராஜாவுக்கு தெரியவந்தது. உடனே சரவணனை அழைத்து கண்டித்துள்ளார். அதன் பிறகு சில மாதங்களாக சரவணன் ஆட்டோ ராஜாவின் மனைவியுடனான தொடர்பை துண்டித்து தனது வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே சரவணன் மீண்டும்  ஆட்டோ ராஜாவின் மனைவியுடனான கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியுடன் சரவணன் ஒன்றாக இருப்பதை பார்த்த ஆட்டோ ராஜா சரவணனை தாக்க முயன்றார். ஆனால் சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ரவுடி ஆட்டோ ராஜா தனது கூட்டாளி வினோத் உட்பட 5 பேருடன் சேர்ந்து சரவணனை வெட்டி கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி நேற்று மாலை ரவுடி ஆட்டோ ராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரவணன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமியையும் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : householder , Fish seller, cut, attempt to kill
× RELATED வத்திராயிருப்பு அருகே 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்