×

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் அகியோர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் பெண்கள் பற்றி அவதூறாக பேசி இருந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பாண்டியா மற்றும் ராகுலின் கருத்து உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைக்குணிவை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகா்கள் கருத்து தெரிவித்தனர்.

பாண்டியா மற்றும் ராகுலின் சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது. இது தொடா்பாக வீரா்கள் இருவரும் பிசிசிஐயிடம் விளக்கம் அளித்தனா். மேலும் ஹர்திக் பாண்டியா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டு பதிவிட்டார். அதை தொடர்ந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்தது.

உலகக் கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு பாண்டியா, ராகுல் மீதான தடையை நீக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகக்குழுவுக்கு பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா வலியுறுத்தினார்.  இந்நிலையில் தற்போது பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் அகியோர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,Haridih Pandya ,KL Kahl , Indian ,cricketer, Haridih Pandya, KL Kahl ,Unblock
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்