×

நீலகிரியில் நிலவி வரும் உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் நிலவி வரும் உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது என தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக ஊட்டியில் 3.1 டிகிரி செல்சியஸ், கொடைக்கானலில் 9.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nights ,Nilgiris , Nilgiri, Frost, Meteorological Center, Information
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...