×

துரிஞ்சாபுரம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு : பெண்கள் பூஜை செய்து வழிபாடு

கலசபாக்கம்: துரிஞ்சாபுரம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் கிராமத்தில் ஈசான்ய மடம் அருகே சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேப்பமரங்கள் உள்ளது. கடந்த 2  நாட்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு மரத்தில் இருந்து திடீரென பால் வடிய தொடங்கியது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் சிலர் வேப்பமரத்தில் பால் வடிவதை கண்டு ஆச்சரித்துடன் பார்த்தனர்.

இந்நிலையில், வேப்பமரத்தில் பால்வடியும் தகவல் கிராமம் முழுவதும் தீ போல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பெண்கள் ஒன்று கூடி வேப்பமரத்துக்கு மஞ்சள், குங்குமம்,  மாலைஅணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். இதை தொடர்ந்து நேற்றும் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொது மக்கள் வேப்பமரத்தை வழிபட்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pond ,Thurjangapuram , Thurinjapuram, veppamaram, milk, Girls
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...