×

செங்கம் அருகே தைப்பூச விழா.... கொதிக்கும் எண்ணெயில் கையால் வடைஎடுத்து பக்தர்கள் விநோத வழிபாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விடிய விடிய நடைபெற்ற தைப்பூச விழாவில் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடைஎடுத்து பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொரப்படியில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்ட இந்த விழாவில் அலகு குத்திக்கொண்டு அந்திரத்தில் தொங்கியபடி பக்தர்கள் கற்பூர ஆராதனை செய்தனர். இந்த கோவிலின் சிறப்பு வழிப்பாடாக பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுக்கும் விநோத வழிபபாடு நடைபெற்றது. இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்திய வடையை பக்தர்கள் அதிக விலை குடுத்து வாங்கி சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Chengam , Chengam , boiling oil , hand, bizarre ,worship ,vataietuttu
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...