திருமலை: நல்ல நாள், நட்சத்திரம், ஓரை, நல்ல நேரம் ஆகியவற்றை பார்த்து தன்னுடைய செயல்களை தொடங்குவது தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் வழக்கம். மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அவர் மகா ராஜசூய யாகம் நடத்தினார். தற்போது தேசிய அரசியலில் கவனத்தை திருப்பி பாஜ, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது 3வது அணி அமைக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைப்பதற்காக எர்ரவல்லியில் உள்ள தனது தோட்டத்தில் 5 நாட்கள் மகா சண்டி யாகத்தை நேற்று தொடங்கினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி