திருமலை: ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தில் நேற்று காலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த ரயிலில் இருந்து இறங்கிய 20 வாலிபர்களின் செயல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருப்பதை கவனித்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெட்டியை சென்னையில் ஒரு நபரிடமிருந்து 5 லட்சம் கொடுத்து வாங்கியதாகவும், அதில் மிகவும் சக்திவாய்ந்த யுரேனியம், இரிடியம் போன்ற உலோகங்கள் உள்ளதாகவும் அந்த வாலிபர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெட்டியை கிருஷ்ணா நதியின் கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அப்போது அதில் பித்தளை குடம், அலுமினிய ஒயர் இருந்தன. வாலிபர்களிடம் விசாரணை நடக்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி