×

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை : சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 92 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி, 68 ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும் மொத்தம் ரூ.2.47 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். மேலும் வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 2,900 நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாகவும் ரூ.2.55 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : International Investors Convention , Adjournment of the case against the International Investors Convention
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...