×

அரியலூர் அம்பாபூரில் மாயமான வீரபத்திரர் வெண்கலசிலை ஏரியில் கண்டெடுப்பு

அரியலூர்: அரியலூர் அருகே மாயமான வீரபத்திரர்சாமி வெண்கல சிலை நேற்று ஏரியில்  கண்டெடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே  அம்பாபூரில் பழமையான  பெரிநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில்  அம்பாபூர், விக்கிரமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 40 குடும்ப  வகையறாக்களுக்கு சொந்தமான குலதெய்வமாகும். இந்நிலையில், இந்த கோயிலில்  இருந்த 1அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட வீரபத்திரர் சாமி வெண்கல சிலை  மர்மநபர்களால் கடந்த ஆண்டு திருடி செல்லப்பட்டது.

இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதே  ஊரில் உள்ள பெருமாள் படையாட்சி ஏரியில் உள்ள தண்ணீரை விவசாயிகள் தங்களது வயல்களுக்கு இன்ஜின் கொண்டு இறைத்துக் கொண்டிருந்த போது, ஏரியின் உள்ளே  காணாமல் போன வீரபத்திரர் சிலை கிடந்தது தெரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் சிலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ariyalur ,lake ,Bronze Valley , Ariyalur, Veerabhadar Statue, Lake
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...