×

போதையில் பைக் ஓட்டிய 2 வாலிபர்கள் பரிதாப பலி

சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (19). சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (20). இவரது நண்பர் பிரதாபன் (18). இவர்கள் மூவரும் நேற்று முன்தினம்  மாலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேலாத்தூர் காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர், மது போதையில் ஒரே பைக்கில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். சோமங்கலம் அருகே சென்றபோது,  இவர்களின் பைக் எதிரே வந்த சோமங்கலம், மேட்டூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்த தனசேகரனின் மகன்கள்  சஞ்சய்குமார் (19), சதீஷ் (17) ஆகியோரின் பைக் மீது நேருக்குநேர் மோதியது.

இதில் விக்னேஷ் (19) சம்பவ இடத்திலேயே இறந்தார். சஞ்சய்குமார், சதீஷ், அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் துடித்தனர். தகவலறிந்து வந்த சோமங்கலம் போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பிரதாபனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று  காலை அதே பகுதியில் சாலையோரமாக பிரதாபன் இறந்து கிடப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சென்று பிரதாபன் சடலங்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men , Drunk bike, 2 young, pity
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்