×

6 ஏடிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 6 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் அகாடமி திட்ட அதிகாரியாக உள்ள ஏடிஜிபி ஜாபர்சேட், மின்வாரிய விஜிலன்ஸ் ஏடிஜிபி ஸ்ரீலட்சுமி பிரசாத், சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, மத்திய அரசு பணியில் உள்ள மிதிலேஷ்குமார் ஜா, போலீஸ் தொழில் நுட்பப் பிரிவு ஏடிஜிபி தமிழ்செல்வன், அதிரடிப்படை ஏடிஜிபி ஆசீஸ் பேங்க்ரா ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் தற்போது வகிக்கும் பதவிகளிலேயே, டிஜிபிக்களாக நீடிப்பார்கள் என்று உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், தீயணைப்புத்துறை இயக்குநர் மகேந்திரன், பல்லவன் போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் அதிகாரி ஜாங்கிட், சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் திரிபாதி, மனித உரிமை ஆணைய தலைவர் காந்திராஜன் ஆகிய 5 பேர் உள்ளனர். தற்போது மேலும் 6 பேர் டிஜிபிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் 11 பேர் டிஜிபி அந்தஸ்தில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ADGPs ,Digi , chennai,ADGP,promoted,DGP
× RELATED சென்னை மாநகர காவல்துறை மூன்றாக...