×

கோவை அருகே பூலுவபட்டியில் சிறுத்தை தாக்கி 5 ஆடு, 4 கோழி பலி

தொண்டாமுத்தூர்: கோவை அருகே பூலுவபட்டியில் ஒரு தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடு, 4 கோழிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கோவை அருகே பூலுவபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இவர் மாடு, ஆடு, கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள், 4 கோழிகள் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தன. கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மாட்டையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவயிடத்தில் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பதிந்திருந்த ஒரு விலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால்தடம் தான் என்பதை உறுதி செய்தனர். விவசாயிகள் கூறியதாவது: இதே பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ஒரு சிறுத்தையை கடந்த மாதம் தான் பிடித்து சென்றனர். இந்நிலையில் மேலும் ஒரு சிறுத்தை 5 ஆடு, 4 கோழிகளை சிறுத்தை கொன்றுள்ளது. சிறுத்தையின் தாக்குதலைப் பார்த்து ஒரு மாடு கயிற்றை இழுத்து அவிழ்த்து சென்று தப்பியோடிவிட்டது. மாட்டை தேடி வருகிறோம். அந்த மாட்டையும் சிறுத்தை தாக்கியிருக்கலாம் என அஞ்சுகிறோம். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். சிறுத்தை தாக்கி ஆடு, கோழிகள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chicken murderer ,Pulawatti ,Coimbatore , Leopard, goat, chicken, kovai
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...