×

மகன் தனியாக இறுதி சடங்கு செய்த கொடுமை சரத்குமார் கண்டனம்

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தில் கணவனை இழந்த சின்ஹானியா என்பவர் உயிரிழந்தார். தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய 17 வயது மகன் சரோஜ் முயன்றபோது, இவர்கள் தாழ்ந்த சாதி என்பதை காரணம் காட்டி இறுதிச்சடங்கு செய்வதற்கு யாரும் உதவி செய்ய வராததால், மரக்கட்டைகளை பயன்படுத்தி அதன்மீது தனது தாயின் உடலை வைத்து தன்னந்தனியாக சைக்கிளில் 5 கி.மீ தூரம் எடுத்து சென்று காட்டுப்பகுதியில் இறுதிச்சடங்கு செய்த கொடுமையான நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு இதுபோன்ற சாதிய கொடுமை சம்பவங்களை அலட்சியமாக வேடிக்கை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarath Kumar , Horrible torture done , son alone , condemned by Sarath Kumar
× RELATED பாஜகவுடனான கூட்டணி...