×

திருப்பத்தூர் அருகே 6 பைக் எரிப்பு, வீடுகள் சூறை : இரு பிரிவினர் இடையே மோதல்

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி ஊராட்சியில் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இரு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஜனவரி 1ம் தேதி ஒரு தரப்பினர்,  மற்றொரு தரப்பினரை ஊருக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைக்க சென்றனர். அப்போது திடீரென மற்றொரு தரப்பினர் கும்பலாக வந்து பெண்களையும், ஆண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அலறியடித்துக்கொண்டு கோயிலில் இருந்து பெண்கள் வெளியே ஓடி வந்தனர்.

இதையடுத்து அவர்கள், தங்களை தாக்கியவர்களின் வீடுகளுக்குச் சென்று வீடுகளை அடித்து சூறையாடினர். மேலும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6க்கும் மேற்பட்ட பைக்குகளை தீயிட்டு கொளுத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : homes ,Tiruppattur ,conflict , Tirupattur, two divisions, conflict, housing damage
× RELATED திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது