×

காஷ்மீர் பனிச்சரிவில் லாரி சிக்கி 5 பேர் பலி

ஸ்ரீநகர்,:  காஷ்மீரில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.  ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், லடாக்கில் உள்ள கர்துங்லா பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் லாரி ஒன்றில் 10 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். மலைப்பாதையில் லாரி வந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் லாரி முழுவதுமாக பனிகட்டிகளால் மூடப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்களும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி நடக்கிறது. இதுவரை பனியில் சிக்கி இறந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir , Kashmir, ice slide, kills 5
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!