சென்னை: எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியேற்பதில் தாமதம் ஏற்பட்டால் மாணவர் சேர்க்கையில் சுணக்கம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி ஆணை பெற்று உடனடியாக பணியில் சேருமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் வரும் திங்களன்று தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி