×

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு உற்சாகம்... 500 காளைகள்... 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வியாகுலமாதா திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல்ஹக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண வையம்பட்டி, கருங்குளம், உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு ஜன. 15ல் அவனியாபுரம், தொடர்ந்து ஜன. 16ல் பாலமேட்டில் நடந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியசாமி கோயில் திடலில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. சீறும் காளைகளை வீரத்துடன் வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

சேலம் - ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : enthusiast ,Candapudi , Manapparai, jallikattu, Trichy, Bulls
× RELATED தமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த...