×

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் 17 வயது மாணவிக்கு குழந்தை இறந்தே பிறந்தது: 38 வயது நபருக்கு வலை

ஊத்தங்கரை:  பலாத்காரம் செய்ததில் கர்ப்பமடைந்த மாணவிக்கு குழந்தை இறந்து பிறந்தது.    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புங்கனையைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாய் கோவையில் உள்ள மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தாய், மகள் இருவரும் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரைக்கு புத்தாடை வாங்க சென்றுள்ளனர். பஸ்சில் வந்தபோது மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த தாய், அங்கிருந்தவர்கள் உதவியுடன் மகளை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து, மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்ைத இறந்து பிறந்தது.

இதனைத்தொடர்ந்து மாணவிக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. எனவே அங்கிருந்து மருத்துவர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் தாயார், கல்லாவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். அதில், புங்கனை பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(38) என்பவர்தான் தனது மகள் கர்ப்பத்திற்கு காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர். தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : A 17-year-old girl, born dead, 38 years old
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...