மன்னார்குடி: கொடநாடு பிரச்னையில் தமிழக போலீசார் விசாரிப்பதைவிட சிபிஐ விசாரிப்பதே நியாயமாக இருக்கும். தன் மீதான களங்கத்தை போக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானே முன்வந்து சிபிஐ விசாரணை கோரவேண்டும் என திவாகரன் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தெகல்கா முன்னாள் ஆசிரியர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரிடையாக குற்றம்சாட்டுகிறார். மேலும் இதில் துணை முதல்வர் ஓபிஎஸ்சுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.