×

பெண்கள் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது - கலெக்டர் சண்முக சுந்தரம் அறிக்கை

சென்னை: பெண்கள் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.  சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2018-19ம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

இதற்கான விதிமுறைகள், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க  வேண்டும். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறையில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் கருத்துரு புக்லெட் -2, தமிழ் 1 மற்றும் ஆங்கிலம் 1 மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவைகளுடன் தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரும் 28ம்தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், சிங்காரவேலனார் மாளிகை 8வது தளம், சென்னை-1 என்ற முகவரியில் அணுகலாம். மேலும் 044-25264568 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shanmugam Sundaram ,women , Women's Progress, Award, Collector Shanmugam Sundaram
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது