×

ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கமும், காவி உடையும் மம்தாவுக்கு பிடிக்கவில்லை : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு!!

டெல்லி: மேற்கு வங்கத்தில் 40 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.மேற்கு வங்க மாநிலம் ஜெயநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘ மேற்கு வங்கத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜ., உள்ளது. பா.ஜ., அலை வீசுகிறது. அமைதியாக இருங்கள் என மம்தா கூறுவதாக செய்திவந்துள்ளது. ஆனால், மம்தாவும், திரிணமுல் கட்சியும் அமைதியாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.மே.வங்க மக்களுக்கு தாங்க முடியாத வேதனையை அக்கட்சி அளித்துள்ளது. தோல்வி விரக்தியில் பல்வேறு தலைவர்களை உதவிக்கு அழைத்து கடிதம் எழுதியுள்ளார் மம்தா. தனக்கு உதவிசெய்வதற்காக வெளியாட்களை துணைக்கு அழைக்கிறார் மம்தா பானர்ஜி.மம்தா என்னை வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம். ஆனால் மக்கள் நம்பிக்கையை விமர்சிக்க விடமாட்டேன். ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கமும், காவி உடையும் மம்தாவுக்கு பிடிக்கவில்லை. துர்கா சிலையை கரைப்பதிலும் தற்போது ‘திலகம்’ வைப்பதிலும் மம்தாவுக்கு பிரச்னை உள்ளது. இது அனைத்தும் மக்களுக்கு தெரியும்.  நான் கோவில்களில் தேர்தல் போன்ற சீசன் சமயத்தில் மட்டும் பயபக்தியைக் காட்டும் நபரல்ல. நமது நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்.வங்காளத்தில் பாஜகவுக்கு 200 க்கும் மேற்பட்ட இடங்கள் நிச்சயம் கிடைக்கும்,’ என்றார். …

The post ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கமும், காவி உடையும் மம்தாவுக்கு பிடிக்கவில்லை : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mamata ,Jai Sriram ,PM Modi ,West Bengal ,Delhi ,Jai Shriram ,
× RELATED மோடி வழிகாட்டுதலில் பொம்மையாக...